சென்னை: தாய், சேயை காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். சேலம் ஆனைவாரி நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்டவர்களுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களின் தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.