திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரளா அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ரூ.1,500 கோடியில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கேரளா அரசு தயாரிக்கிறது. வரும் டிசம்பரில் ஒன்றிய அரசின் நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.