சேலம்: சன் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேட்டூர் அணையில் காவிரி கரையோரம் உள்ள ஆலை கழிவுகள் மற்றும் பெங்களூரு மாநகர கழிவுகள் தினந்தோறும் கோடிகணக்கான லிட்டர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து சன் டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நீர்த்தேக்க பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர், நாகமரை, மூலக்காடு, திப்பம்பட்டி, கீரைக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு நீர் கரை ஒதுங்கி துர்நாற்றம் வீசுவதோடு காவிரி நீர் நிறம் மாறி வருவதாக புகார் எழுந்தது.