ஆற்காடு அருகே பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க ராட்சத பள்ளம்-வருவாய்த்துறை அதிரடி

ஆற்காடு : ஆற்காடு அருகே பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வருவாய்த்துறை சார்பில் நேற்று ராட்சத பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம்,  ஆற்காடு அடுத்த புதுப்பாடி  பாலாற்றிலிருந்து இரவு நேரங்களில் மாட்டுவண்டிகள் மற்றும் வாகனங்களில் கள்ளத்தனமாக மணல் கடத்தி செல்வதாக ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் வினோத், விஏஓ ராஜேஷ், கிராம உதவியாளர் ராஜி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில்  நேற்று புதுப்பாடி பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பல்வேறு இடங்களில் ராட்சத பள்ளங்கள்  தோண்டப்பட்டது.

பள்ளங்களை  மூடி யாராவது மணல் கடத்திச் சென்றால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: