சென்னை: ஒன்றிய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும் என்று தலைமைச்செயலர் வெ.இறையன்பு கூறியுள்ளார். பவர் பாயின்ட்டில் விவரங்களைத் தயார் செய்து வைக்கவும் தலைமைச்செயலர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.