துபாய்: 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. தென்னாப்ரிக்காவுடன் மேற்கிந்திய தீவுகளும் நியூஸிலாந்துடன் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நிகழ்த்துகின்றன. ஏழாவது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவாக ரவுண்ட் ட்ராப்பிங் லீக் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் குரூப் 1 லீக் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்த்து மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்குகிறது. இவ்விரு அணிகளும் தத்தமது முதலாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவின. எனவே இரண்டாவது லீக்கிலும் தோல்வியுறும் அணிக்கு நாக்அவுட் வாய்ப்பு மங்கிவிடும் என்பதால் வரிந்து கட்டி விளையாடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.