சேலம்: வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளர் மணி, செல்வகுமார் ஆகியோர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.