×

நீலகிரி கலெக்டருக்கு கொரோனா

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா  ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கலெக்டரின் மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவும் தொற்றுக்கு ஆளானார். கடந்த ஒரு வார காலமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அரசு மற்றும் தனியார் என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் உள்ளார்.


Tags : Nilgiri Collector , Nilgiri Collector, Corona
× RELATED பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு...