திருவொற்றியூர்: எண்ணூர், அத்திப்பட்டு மேம்பாலம் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது, அவரிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பதும், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனின் கூட்டாளி என்பதும் தெரிந்தது. மேலும் விசாரணையில், ரவுடி தனசேகரன் ஆந்திராவில் இருந்து கார்த்திகேயன் மூலம் கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, கார்த்திகேயனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.