அண்ணா நகர்: சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள்(29). டிராவல்ஸ் நிறுவன அதிபர். சென்னை மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் கௌதம்ராஜ்(40), அருண்குமார்(29), சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அன்சாரிபாய்(35). இவர்கள், முகப்பேர் கிழக்கு திருவள்ளுர் சாலையில், நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இங்கு அருண்குமார் மேனேஜராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர்கள், கொரோனா காலத்தில், கார் ஓட்ட முடியாமல், வருமானம் இன்றி, அவதிப்படுபவர்கள், தங்கள் காரை, எங்கள் நிறுவனத்துக்கு கொடுத்தால், மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் கொடுப்போம் என விளம்பரம் செய்தனர். இதனை நம்பிய சிவபெருமாள் உட்பட 100 பேர், அந்நிறுவனத்தில், தங்களது கார்களை ஒப்படைத்தனர். இதனையடுத்து, ஒன்றிரண்டு மாதங்கள், ரூ.30,000 கொடுத்த அவர்கள், திடீரென தலைமறைவாகி விட்டனர்.