சொல்லிட்டாங்க...

இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். தாய்மொழியை உன்னதமாக கருத வேண்டும்.

- துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு

தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது.

- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்படுகிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது  குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.

- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

போதை பொருள் விவகாரத்தில் ஆர்யன் கான் உட்பட பலரை கைது செய்துள்ளது, மகாராஷ்டிராவை களங்கப்படுத்தும் ஒரு பெரிய நாடகம்.

- சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்

Related Stories: