புதுடெல்லி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காக ‘பொது பயன்பாட்டு நிலப்பகுதி’, ‘குடியிருப்பு’ பகுதியாக மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ராஜீவ் சூரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான ‘பொது பயன்பாட்டு’ நிலங்களாக இருந்த சில பகுதிகள், ‘குடியிருப்பு’ பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. நில பயன்பாட்டில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தினால், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பசுமையான, திறந்தவெளி இடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உரிமையை பறிக்கிறது. வாழ்வதற்கான உரிமை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமையையும் உள்ளடக்கியது. நில பயன்பாடு மாற்றம் மூலம் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.