கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 136.80 அடியை கடந்த நிலையில், இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கே. ஷாஜி மற்றும் மூணாறு லேண்ட் அசைன்மென்ட் டெபுடி தாசில்தார் கீதா குமாரி தலைமையிலான குழுவினர் முல்லை பெரியாறு அணையில் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முன்னதாக ஆய்வுக்காக இவர்கள் தேக்கடி படகு துறையிலிருந்து கேரள வனத்துறையின் ஸ்பீடு போட்டில் அணைக்கு புறப்பட்டு சென்றனர். இக்குழுவினர் ஆய்வுக்கு செல்வது குறித்து தமிழக அதிகாரிகளிடம் அனுமதி பெறவோ, தெரிவிக்கவோ இல்லை. அணை பகுதியை ஆய்வு செய்துவிட்டு திரும்பினர்.