உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.