திரைவானின் சூரியன் ரஜினி... இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி : ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

டெல்லி : டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விழாவில், இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. .தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியத் திரைத்துறையில்‌ தங்களின்‌ அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்தியத் திரைப்பட உலகின்‌ மிக உயரிய விருதான மற்றும்‌ வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப்‌ பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின்‌ சார்பாகவும்‌, என்‌ சார்பாகவும்‌ வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இந்நாள்‌, திரைப்படங்களை விரும்பும்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்‌சி அளிக்கக் கூடியதொரு பொன்னாள் ஆகும்‌. இந்தியத்‌ திரை உலகிற்கான தங்களின்‌ வியத்தகு பங்களிப்புடன்‌ பொது வாழ்க்கையிலும்‌ தனிப்பட்ட வாழ்விலும்‌ தங்களின்‌ தலைசிறந்த பண்பினால்‌ நம்‌ நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர்‌ நீங்கள்‌.

நீங்கள்‌ நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள்‌ பல நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்‌ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Related Stories: