தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திராவில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: