டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. தனியார் அல்லது அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அடித்தட்டு மக்களை கொண்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள 157 கல்லூரிகளில் 63 கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக அத்துறை தெரிவித்துள்ளது.