கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பகுதியில் மிதமான மழையால் சோழப்பயிர்கள் செழுமையாக வளர்ந்து வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் அனைவரும் இயற்கை மழையை நம்பி விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் விவசாய பணியாளர்களுக்கு நல்ல ஊதியத்தில் தினசரி வேலை கிடைத்து வருகிறது.