சேலம்: கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரில் 28 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரி நீரில் காசினோசென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஐஐடி ஆய்வில் உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆலைகளில் இருந்து கோடிக்கணக்கான லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலப்பதாகவும் இதனால் மேட்டூர் நீர்த்தேக்கம் மாசடைந்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கழிவு நீரால் மேட்டூர் நீர் பச்சைநிறத்தில் காட்சியளிப்பதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.