தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது: விஜயகாந்த் ட்வீட்

சென்னை: 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். நமது கழகம் என்றென்றும் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும்.  கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: