பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனையை அனுபவிப்பதற்காக கடைசியாக 2018ம் ஆண்டு பாட்னாவில் உள்ள தனது வீட்டில் இருந்து அவர் சென்றார். சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள தனது மூத்த மகள் மிசா பாரதியின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று அவர் பீகார் திரும்பினார். அவருடன் மனைவி ரப்ரிதேவியும் வந்தார்.