நொய்டா: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் வீரதீர செயல்புரிந்த இந்திய - திபெத் எல்லை போலீசார் 20 பேருக்கு வீரதீரத்துக்கான பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீனா இடையிலான அசல் கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. இங்கு இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராணுவத்துடன் சேர்ந்து இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர் பணியாற்றி வருகின்றனர்.