காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அன்னவாசல் சாலையை சேர்ந்தவர் குமார் ஆனந்த் (53). பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இவர், நெடுங்காடு அருகே பருத்திகுடியில் தனக்கு சொந்தமான ரூ.4கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலத்தை தாய்மாமன் தேவராஜ் பராமரிப்பில் கொடுத்தார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிலம் தரிசாக விடப்பட்டது. இந்நிலையில், குமார்ஆனந்த் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் மற்றும் சொத்தை தாய்மாமன் தேவராஜிக்கு உயில் எழுதியதாகவும் தயார் செய்துள்ளனர். அதன்மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநள்ளாறு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பாஸ்கர் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.