373 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: ராமாபுரம், அயனாவரம் பகுதிகளில் வேன் மற்றும் பைக்கில் கடத்தி வந்த 373 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். ராமாபுரம் அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ராயலா நகர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேனை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் 318 கிலோ குட்கா இருந்தது. இதுதொடர்பாக கோவில்பட்டி ஜெபர்சன்(24), மாரீஸ்வரன்(39), முருகன்(29) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், அயனாவரம் மேட்டுத்தெரு பகுதியில் நேற்று முன்தினம்அயனாவரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது,  பைக்கில் கடத்திய 55 கிலோ குட்கா பொருட்களை அயனாவரம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெரியமேடு முகமது எட்வின்(27), முகமது ஜல்லு உசேன்(35) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: