தமிழகம் காஞ்சிபுரத்தில்; டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பரிதாப பலி Oct 24, 2021 காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மகள் ஸ்ருதி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஸ்ருதிக்கு கடும் காய்ச்சல் அடித்தது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், மாணவிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ஸ்ருதி உயிரிழந்தார். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிப்பு
பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு..!!
கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
கருத்தை திரித்து கூறி ஆதாயம் தேட முயற்சி; நவீன ‘கோயபல்ஸ்’ மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: செல்வபெருந்தகை கண்டனம்