ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டிலும் தலா 2 ஆயிரத்திற்கும் அதிகமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். மேலும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் வசித்து வருகின்றனர். தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது. இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் இளைஞர்களை தாக்கி செல்போன், பணம், நகை பறிப்பு, பைக் திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.இந்நிலையில், கடந்த 10ம்தேதி ஸ்ரீபெரும்புதூர் டோல்கெட் அருகில் நடந்து சென்ற மூதாட்டியிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.