ஆவடி: பாடியில் கள்ளக்காதல் பிரச்னையில் கார் விற்பனையாளரை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அருகே பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). இவர் கார் மற்றும் ஆட்டோக்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவந்தார். கோபிக்கும் கொரட்டூர் காமராஜர் நகரை சேர்ந்த ராணி (40) என்பவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ராணி வீட்டுக்கு கோபி சென்றுவந்துள்ளார். நேற்றுமுன்தினம் ராணி வீட்டில் கோபி இருந்தபோது ராணியின் மருமகன் கொரட்டூர் சாவடி தெருவில் வசித்துவரும் நந்தகுமார் (22) பார்த்துவிட்டார். அவர் சென்று தட்டிக்கேட்டபோது கோபிக்கும் நந்தகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நந்தகுமார் சரமாரி தாக்கியதில் கோபியின் மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்தார்.