மதுரை: ஆன்லைன் பட்டா மாற்றம் கோரிய மனுக்களின் மீது 3 மாதத்தில் நடவடிக்கை எடுத்து அறிக்கையளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் பட்டா மாறுதல் செய்யக் கோரி பல மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது நில அளவை கூடுதல் இயக்குநர் கண்ணபிரான் ஆஜராகி, ‘‘பட்டா மாறுதல் கோரிய ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 31 வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 994 மனுக்கள் நிலுவையில் இருந்தன. ஏப்.21 வரை மொத்தமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 632 மனுக்கள் பெறப்பட்டன. மொத்தமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 576 மனுக்களில் செப்.21 வரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 448 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டது. அக்.1 வரையில் ஒரு லட்சத்து 2,128 மனுக்கள் நிலுவையில் உள்ளன’’ என்றார்.