நத்தம்: நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கள்ள நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்வதுடன், அதன் பயன்பாடும் இருந்து வருவதாக எஸ்பி சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் நத்தம் எஸ்ஐ சேகர் தலைமையில் ஆண்டிச்சாமி, பாக்கியராஜ் உள்ளிட்ட ேபாலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று செந்துறை அருகே களத்துப்பட்டியில் ஆண்டிச்சாமி (51) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.