அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு நோக்கி, நேற்று முன்தினம் இரவு சைரன் ஒலித்தபடி, விஐபி பாதுகாப்பு வாகனம் ஒன்று, போக்குவரத்துக்கு இடையூறாக, மற்ற வாகனங்களை உரசியபடி தாறுமாறாக சென்றது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், அந்த வாகனத்தை விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர். அப்போது, வாகனத்தில் இருந்த 3 பேர் தப்பி ஓடினர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.