நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்றவர் கைது

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ேபாலீசார்  நேற்று செந்துறை  அருகே களத்துப்பட்டியில் ஆண்டிச்சாமி (51) என்பவரது வீட்டில் சோதனை  நடத்தினர். அங்கு தயார் நிலையில் ஒரு நாட்டு துப்பாக்கி,  துப்பாக்கிகள் தயாரிப்பிற்கு தேவையான கட்டை, லீவர், இரும்பு குழாய்கள்  உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் கருமருந்து பொடிகள் இருப்பது தெரிந்தது.  இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, ஆண்டிச்சாமியை கைது செய்தனர்.  தொடர்ந்து அவரிடம் துப்பாக்கிகளை வாங்கியவர்கள் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: