சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் இருந்து மறுகுடியமர்வு செய்யப்படும் குடிசைப்பகுதி மக்கள் நியாயமாகவும் மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய புதிய குடிசைப்பகுதி மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை உருவாக்கப்படும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை வரைவு இணையதளத்தில் 12.10.2021 அன்று வெளியிடப்பட்டது. வரைவு கொள்கை குறித்து அனைத்து தரப்பினரிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் 15 நாட்களுக்குள் (27.10.2021) ஆன்லைன் உள்ளீட்டு படிவு இணைப்பில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.