புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், நெல்லுக்கு தீ வைக்கும் வீடியோவை பாஜ எம்பி வருண் காந்தி சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். வேளாண் கொள்கை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்கீம்பூர்கேரியில் விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டது மற்றும் வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜ எம்பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து பாஜ தேசிய நிர்வாக குழுவில் வருண் காந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், வேளாண் சட்டங்களை குறித்து ஒன்றிய அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.