டேராடூன்: உத்தரகாண்டில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஹர்சில்லில் இருந்து சிட்குல் பகுதிக்கு லம்காகா வழியாக மலையேற்ற வீரர்கள் சென்றனர். அப்போது, கடுமையான பனிப்பொழிவினால்பனிச்சரிந்து இவகள் சிக்கினர். இவர்களை மீட்கும் பணியில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு பெண், மேற்கு வங்கத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.