திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்ட அரை மணி நேரத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக தற்போது விஐபி தரிசன டிக்கெட் மற்றும் ஆன்லைன் மூலம் ₹300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி வரும் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் நேற்றுமுன்தினம் காலை வெளியிடப்பட்டது.