சொல்லிட்டாங்க...

கோவாவில் ‘இரட்டை இன்ஜின்’ அரசு (ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பாஜ ஆட்சி) மூலம் வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும்.

- பிரதமர் மோடி

விண்ணை தொடும் அளவுக்கு பணவீக்கம், எல்லையில் மோதல் போக்கு, எனினும், இந்தியா சிறந்து விளங்குகிறது. ஆனால், ஒன்றிய அரசு தோல்வியடைந்து விட்டது.

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

10 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டது போதும். கோவாவில் புதிய அரசை அமைப் பதன் மூலம் மக்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்துவோம்.

- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்த நாளான நவ.1ம் தேதியை தமிழ்நாடு நாள் அல்லது தமிழர் இறையாண்மை நாளாக கொண்டாட வேண்டும்.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: