துபாய்: நெதர்லாந்து ஏரி ஒன்றில் வாழைப்பழம் போன்று மஞ்சள் நிறத்தில் அரிய நிற மீன் ஒன்று சிக்கியது. அரிய நிற மீனை மீண்டும் ஏரியிலேயே விட்டனர். நெதர்லாந்தில் உள்ள ஏரியில் கிளாட்ஸ் என்பவர் தனது சகோதரருடன் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தார் . அப்போது கேட்ஃபிஷ் வகையை சேர்ந்த முழு மஞ்சள் நிறத்தில் மீன் ஒன்று அவர்களின் கையில் சிக்கியது.அரிய வகை நிறத்தில் இருந்ததால் ஆச்சரியமடைந்த கிளாஸ் சில புகைப்படங்களை எடுத்து கொண்டு மீண்டும் தண்ணீரில் விட்டு விட்டார். இப்பகுதியில் வேல்ஸ் கேட்பிஷ் எனப்படும் மீன் வகைகள் அதிகளவில் பிடிபடும்.