மேட்டுப்பாளையம்: தண்டவாள பாதையில் மண்சரிவு காரணமாக 180 பயணிகளுடன் சென்ற மலை ரயில், மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் 180 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. ரயில், கல்லார் ரயில் நிலையத்தை அடைந்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடர்லி நோக்கி சென்றது.