மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் விமானம் நேற்று வந்தது. அதில் வந்த 138 பயணிகளும் விமானத்தை விட்டு இறங்கி சென்றனர். மீண்டும் அந்த விமானம் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்கிடையில், விமான நிலைய ஊழியர்கள், விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர். ஒரு சீட் தூக்கி கொண்டிருந்தது. அதை சரி செய்ய முயன்றனர். ஆனால் அந்த சீட்டுக்கு அடியில் ஏதோ இருப்பது தெரிந்தது. உடனே சீட்டை தூக்கி பார்த்தபோது, வெள்ளை நிறத்தில் 2 பார்சல் இருந்தது. உடனே மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, மெட்டல் டிடெக்டர் மூலம் பார்சல்களை பரிசோதித்தனர்.