பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட முடங்கன்விளை பகுதி உள்ளது. விவசாய விளைநிலங்கள் நிறைந்த இப்பகுதியில் ஒரு சுடுகாடும் உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல பழையாற்றின் கரையோரமாக சாலை வசதி உள்ளது. இதன் வழியாக விவசாயம் சார்ந்த பொருட்களையும், சுடுகாட்டுக்கு சடலங்களையும் எடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் ஊராட்சி சார்பில் காங்கிரீட் போடப்பட்டது. இதனால் சாலை பொதுமக்களின் போக்குவரத்து மிகவும் எளிதானது. இந்த நிலையில் குமரியில் வெளுத்து வாங்கிய மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சாலையின் ஒருபகுதி காங்கிரீட் உடைந்தது. மேலும் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.