×

திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிப்பு.! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தளர்வுகள் பின்வருமாறு;

* பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படலாம் என்ற கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுகிறது

* அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் இன்று முதல் அனுமதி;

* சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி.

* நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி.

* நவம்பர் 1 முதல் கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதி

* திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

* நவம்பர் 1 முதல் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே (கேரளா தவிர) சாதாரண மற்றும் ஏசி பேருந்து போக்குவரத்து 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

* அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்.

* தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி.

Tags : Government of Tamil Nadu , Theaters allowed to run with 100% audience: Curfew with relaxations extended till November 15! Government of Tamil Nadu order
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...