சோழவந்தான்: சோழவந்தான் அருகே, அரசு கொள்முதல் நிலையத்தில், மழையில் நனைந்து நெல் வீணாவதால், உடனடியாக கொள்முதல் செய்ய, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம் ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளின் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் அதிகாரிகள் கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைகின்றன. மேற்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடினாலும், தரையில் செல்லும் நீரால் அடிப்பகுதி ஈரமாகிறது.