கம்பம்: தொடர் மழை காரணமாக கம்பம்மெட்டு மலைச்சாலையில் பாறைகள் சரிந்ததால் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் கம்பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. இந்தச் சாலையில் நாள்தோறும் விவசாய மற்றும் வணிக ரீதியாக சுமார் 500க்கும் மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.கடந்த மூன்று நாட்களாக இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று திடீரென்று பாறைகள் கம்பம்மெட்டு மலைச்சாலை 6வது கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்தது.