சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் வீட்டை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். சென்னை, சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் நடிகர் மன்சூர் அலிகான் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்ைட கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் 2400 சதுர அடி நிலத்தை அப்பாவு மற்றும் அவரது மகன் பாரி ஆகியோரிடம் இருந்து அவர் வாங்கியுள்ளார். பிறகு அது அரசு புறம்போக்கு நிலம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு அரசு புறம்போக்கு நிலத்தை தன்னிடம் விற்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.