குளச்சலில் படகு மீது கப்பல் மோதியது - 17 மீனவர்கள் உயிர் தப்பினர்

கன்னியாகுமரி: குளச்சலில் படகு மீது கப்பல் மோதியதால் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய 17 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கப்பல் மோதியதில் விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது. காயமடைந்த மீனவர்கள் சின்னத்துரை, அருள்ராஜ்க்கு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பனாமா நாட்டு சரக்கு கப்பல் மோதியதால் சேதமடைந்த விசைப்படகு, 15 மீனவர்கள் குளச்சலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: