மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் மாரி சின்னம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே, சுமார் 150 ஆண்டு பழமையான ஸ்ரீவேணுநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, தினமும் 3 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்கு சுவரில் பொருத்தியுள்ள உண்டியலில், காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம். இக்கோயிலில், கடம்பாடி கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ஜெயலட்சுமி, தினமும் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.