பொன்னேரி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை ஊராட்சியில் அடங்கிய தண்டலம் கிராமப்பகுதியில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இறால் பண்ணை மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்க பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் தங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்ணரிப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்தால் குடிநீர் மாசுபாடு மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.