மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், மாவட்ட கல்வி அலுவலர், ஐகோர்ட் கிளை பதிவாளர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில், ‘‘நான் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். என் தந்தை எங்களை விட்டுச் சென்றதால், 14 ஆண்டுகளாக நானும், என் தாயும் தாத்தாவின் பராமரிப்பில் வசிக்கிறோம். பள்ளி ஆவணங்கள் மற்றும் ஆதாரில் என் தாயின் பெயரின் முதல் எழுத்தையே இன்சியலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. திறனாய்வு தேர்வு மற்றும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது, தந்தை பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக போடுமாறு கூறுகின்றனர். எங்களை தவிக்க விட்டுச் சென்ற என் தந்தையின் பெயரை இன்சியலாக பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை.