ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்று வருகின்றனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை தடுக்கும் வகையில் , கூடுதலாக 50 கம்பெனி வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தப்பி சென்று விடுகின்றனர். அதை தடுக்கவே பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.