மும்பை: மத்திய மும்பையின் கர்ரி ரோடு பகுதியில் 61 மாடிகளை கொண்ட அவிக்னா பார்க் என்ற குடியிருப்பு உள்ளது. நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த கட்டிடத்தின் 19வது மாடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமள என அந்த மாடியில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் பரவியது. தீப்பற்றியதை அறிந்த செக்யூரிட்டி அருண் திவாரி (30) என்பவர் மாடியில் இருந்து கீழே செல்ல முடியாமல் தவித்தார். இதனால், பால்கனி வழியாக குதித்து தப்புவதற்காக அங்கு தொங்கியபடி இருந்தார். அப்போது புகை மண்டலமாக இருந்ததால், பால்கனியில் இருந்து தொங்கிய அவர் குதித்தார்.